Description
பூமி பேசுகிறது. அதன் செய்திகளைச் சொல்கிறது. நாவினால் அது பேச வில்லை. நில நடுக்கத்தாலும் தன் உள்ளே உள்ளவற்றை வெளியே தூக்கி எறிவதன் ஊடாகவும் பேசுகிறது. பூமியின் மீதான வாழ்வு முடிந்துவிட்டது. பூமி பேசுகிறது என்பது இங்கே ஓர் உருவகப்படுத்தல் பிரயோகமாகும். இலக்கியத்தில் இது ஏற்புடைய பரவலான பிரயோகமாகும். அல்-குர்ஆனிலும் இதனை அவதானிக்க முடியும்.
பூமியில் மனிதர்கள் பேசியவை, செய்தவை அனைத்தையும் பூமி அந்த மறுமை நாளில் எடுத்துக் கூறும் என்று இவ்வசனத்திற்குப் பொருள் கொள்ள முடியும். இந்தவகையில் மனிதனுக்கான விசாரணையின்போது பூமியொரு சாட்சியாக அமையும் என்பது இவ்வசனத்தின் பொருளாகும். இது பற்றி இறை தூதர் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு விளக்கினார்கள்.
இறை தூதர் (ஸல்) அவர்கள், “அது தனது செய்திகளை அந் நாளில் எடுத்துரைக்கும் என்ற வசனத்தை ஓதி விட்டு அதன் செய்திகள் என்ன எனத்
தெரியுமா என்று கேட்பார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் எனத் தோழர்கள் அப்போது கூறினார்கள். ஒவ்வொரு ஆண், பெண் அடியாரும் தன் மீது செய்த செயல் பற்றிச் சாட்சி சொல்வதே பூமியின் அந்த செய்திகளாகும். அதாவது இன்னின்ன செயல்களை இன்னின்ன நாட்களில் செய்தான் என அது சொல்லும். (முஸ்னத்அஹ்மத் 2/374, ஸுன்ன திர்மிதி 3353, நஸாயி குப்ராவில் 11)
முற்கால மனிதனுக்கு மனிதனால் விளைந்த நிகழ்வுகளை பூமி எவ்வாறு எடுத்துரைக்கும் என்பதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருந்திருக்கும்.
ஆனால் நவீன காலப் பிரிவில் சினிமா, ரேடியோ, தொலைக் காட்சி, ஒலி, ஒளிப்பதிவு போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் என்ற விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் இதனை விளங்கிக் கொள்வதை இலகுவாக்கி உள்ளன.
மனிதனின் சொல்லும், செயலும் அவனைச் சுற்றியுள்ள அவற்றைக் கடத்தும் ஊடகமான காற்று மண்டத்தில் பதிவாகிறது என்ற விஞ்ஞான ஆய்வுகள் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
Reviews
There are no reviews yet.