Description
அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். மூன்று நான்கு மணிநேரம் சுற்றி அலைந்தும் அவனால் எந்த ஒரு பெரிய விலங்கையும் சுட்டுக் கொல்ல முடியவில்லை. சுரங்கத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு வேலை பார்த்த அடிமைகளில் வயதானவர்களில் பத்து பேர்களைப் பிடித்து வரச்சொல்லி அவர்களை சுட்டுக்கொன்று ஆவேசத்துடன் கத்திக் கூச்சலெழுப்பினான். அன்று இரவு ஆப்ரிக்கா, ஆசிய அடிமைப் பெண்களை இழுத்துவரச் சொல்லி அவன் ஆட்களை விட்டுப் புணரச்செய்து அதைப் பார்த்து ரசித்தான். பெரிய வாள் கொண்டு புணரப்பட்ட அடிமைகளின் பிறப்புறுப்பு, பிட்டம், மார்பு, முகம், தலை என அவன் உடல் சோர்வுறும் வரை வெட்டி வீசினான்.
Reviews
There are no reviews yet.