Description
மத நம்பிக்கைகள் பொதுவாகவே பிறப்போடு வருகின்றன. ஆனாலும் பிறப்பினால் ஒரு மதத்தில் இருப்பவர்கள் தங்கள் சமய நம்பிக்கைகளை கேள்வி கேட்பதே இல்லை.ஏனெனில் அவர்களுக்குப் பிறந்த உடன் போடப்பட்ட ஒரே ” கண்ணாடி” வழியே பார்த்துதான் பழக்கம். அந்தக் கண்ணாடியைக் கழட்டுவதே பாவம் என்ற நினைப்பில் வாழ்வதுவே நமது வழக்கை. ஒரு சிலருக்கு சில ஜயங்கள் ஏதெனும் எழலாம். அவ்வப்போது தலைகாட்டும் இந்த ஜயங்களை அவர்களது. நம்பிக்கைகள் பொதுவாக ஆழப் புடைத்து விடும். இந்த ஜயங்களின் மீது தொடந்து கேள்விகளை எழுப்பி விவாதப் பொருளாக மாற்றியுள்ளார் நூலாசிரியர்.
இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரியிலும் நேர்மை, வெளிப்படைத் தன்மை, நாகரிகம் என்னும் உயர் பண்பு, அறிஞ்ர்களுக்கே உரிதான துணிவு, தங்கு தடையற்ற நடையழகு போன்ற அரிய பண்புகள் இழையோடுவதைக் காணலாம்.
Reviews
There are no reviews yet.