Description
ஒவ்வொரு இஸ்ரேலிய அதிகாரியும் திட்டமிட்டு, முறையாக, ஒழுங்குபடுத்தப்பட்ட ஷரோனிய ஆவியாக மாறியிருக்கின்றனர். குறிகொண்டு, திட்டநோக்குடைய கருதுதலுடன், உளமார்ந்த உணர்வுப் போக்கில், நிதானித்த முறையில், அவர்கள் பாலஸ்தீனிய மக்களை அணுகுகின்றனர்.
தற்கொலைப்படை என்பது கண்டிக்கத்தக்கதுதான். ஆனால் அது, குறைகூற முடியாத அளவுக்கு நேரடியானதாக இருக்கின்றது. பல்லாண்டுகளாக, நெறியற்ற வழியில் நடத்தப்படுவதாலும், அதிகாரமின்மையாலும், நம்பிக்கையிழப்பின் மனக்கசப்பான முடிவினாலும், உளப்பூர்வமான வகையில் உருப்பெற்றத் திட்டமாக அது இருக்கின்றது என்பது, எனது கருத்து.
ஷரோன் விரும்புவது பயங்கரவாதத்தைதான். அவரின் விருப்பம் ஒருபோதும் அமைதி அல்ல. பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கு, தனது அதிகாரத்தைக்கொண்டு எதையும் அவரால் செய்யமுடியும். ஆனால், அது விளைவிக்கும் பேரச்சம், பாலஸ்தீனியர்களின் வன்முறை, ஒடுக்கப்பட்ட மக்களின் துணிந்து போராடுகின்ற பயமில்லாத மூர்க்கம், அது ஏற்படுத்தும் வேதனைகள், துயரங்களுக்கு, எதிருணர்வு சூழ்நிலைப் பொருத்தமாக மாறிவருகின்றது: பார்ப்பதற்கு அதுவொரு தோல்வியாகத் தெரிந்தாலும், அது மனிதநேயத்தின் தோல்வி.
– எட்வர்ட் செய்த்
Reviews
There are no reviews yet.