எல்லோரும் இந்நாட்டு மன்னர்
அறிஞர் அண்ணா எழுதிய எல்லோரும் இந்நாட்டு மன்னர் - குடியாட்சி, சமூக நீதி மற்றும் அரசியல் சிந்தனைகளைத் தூண்டும் ஒரு சிறந்த புத்தகம். அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788196017330 |
Description
எவரும் கேள்வி கேட்டிட தடுத்து நிறுத்திட முடியாத நிலையிலே ஒருவனை, 'மன்னன்' என்று நாம் அமர்த்திவிட்டால், அவன் கொடுமை செய்ய ஏன் கூச்சப்படப் போகிறான்? யாரிடம் அவனுக்கு அச்சம் ஏற்படப்போகிறது? அவன் ஆணை கேட்டிடப் படை இருக்கிறது; பஞ்சைகள் பராரிகள் எதிர்த்திட முடியுமா!! எனவே கொடுமைகள் இருப்பதற்குக் காரணம், கெட்டவன் ஒருவன் மன்னனானான் என்பது அல்ல; முடியாட்சி முறையே, இக்கேட்டினை முளைவிடச் செய்கிறது. எனவே முடியாட்சி முறை கூடாது கட்டுப்பட்ட கட்டுப்படுத்தக் கூடிய நாமாக அமைத்த, நாமாகக் கலைத்துவிடத்தக்க நம்மைப் புறக்கணிக்க முடியாத ஒரு அரசு முறை, ஒரு அமைப்பு வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது. அதன் விளைவே குடியாட்சி முறை என்பதாகும்.
மமதை, மந்தமதி எனும் கேடுடைக்குணம் கொண்ட மன்னன் நாடாள்வது, தீது தரும் என்பதால், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற ஏற்புடைய, குடிஅரசுக் கோட்பாட்டை நிலைபெறச் செய்துவிட்டதாலேயே, ஆட்சியிலே சீரும் சிறப்பும், மக்கள் வாழ்விலே நலனும் தாமாக வந்து தழைத்திடும் என்று எண்ணிவிடுவது, பேராபத்து. முன்பாவது ஒருவர் மன்னர்! இன்று எல்லோரும் மன்னர்கள்!
-புத்தகத்திலிருந்து
