Skip to content

இரும்பாரம்

அறிஞர் அண்ணா எழுதிய இரும்பாரம் - கிரேக்க, ரோமானியப் பேரரசுகளின் வரலாறு மற்றும் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆழமாக விளக்கும் ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 96
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788196258191

Description

இன்று, உலகில் பல்வேறு நாடுகளிலே காணப்படும் எந்தத் துறைக்கும் 'வித்து' ஆதிநாள் கிரேக்க ரோமானிய அறிவுக் கருவூலம், என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும். கிரேக்க, ரோமானிய பேரரசுகளின் பெருமையைக் கூறிவிட்டுத்தான், பிறவற்றைப் பற்றிப் பேசுவர், மேலைநாட்டு வரலாற்றுரை ஆசிரியர்கள் மெச்சத்தக்கதும், பாடம் பெறத் தக்கதுமான பல்வேறு கருத்துகளை உலகுக்கு அளித்தன. அவ்விரு பூம்பொழில்கள். எனினும் அங்கு உலவி, பிறகு அவைகளை நச்சுக் காடாக்கிய அரவங்கள் சிலவும் உலவின! வண்ணப் பூக்களையும், அவைகளை வட்டமிட்டு வண்டுபாடும் இசையையும், தாமரைபூத்த குளத்தினையும், அதிலே மூழ்கிடும் கோமளவல்லிகளையும், கண்டு சொக்கிவிட்டால் போதாது-மலர்ப் புதருக்குள்ளே அரவங் காட்டாதிருக்கும் அரவம், பச்சைக் கொடியுடன் கொடியாகக் கிடப்பதையும் கண்டுகொள்ள வேண்டும். ரோம் நாடு இறுதியில், ஆற்றலும் அணியும் இழந்து வீழ்ந்து பட்டதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. நச்சரவுகள் போன்ற சில நடவடிக்கைகளை, முறைகளை, கருத்துகளை, நீக்காமற் போனதேயாகும்.

-புத்தகத்திலிருந்து