Skip to content

இரும்பு முள்வேலி

அறிஞர் அண்ணா எழுதிய இரும்பு முள்வேலி - மனித உறவுகள், சமூக அரசியல் மற்றும் இதயத்தில் உருவாகும் தடைகளை நுணுகி ஆராயும் ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது: இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம் 'மனிதத் தன்மை'யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மை மிக்க கருத்தோவியம்....

....ஆடலையும் பாடலையும். அணிவகுப்புகளையும், வெற்றி வஊர்வலங்களையும்.வெறியாட்டத்தையும் பலமுறை காட்டிய பாரிஸ் பட்டினம் அன்று ஒரு புதிய பயங்கரத் தோற்றத்தைக் காட்டி நின்றது. மன்னனைத் தூக்கிலிட மக்கள் கட்டளையிட்டுவிட்டார்கள். மக்கள் ஆணையை நிறைவேற்ற வீரர், அழைத்து வருகிறார்கள் மன்னனை. மன்னன் காணும் மூன்றாவது ஊர்வலம் கடைசி ஊர்வலம்! வெட்டுப் பாறை! வண்டி நின்றது. மன்னன் அமைதி குலையாமல். 'சாகத் தயாரானான். மக்களிடம் 'நான் குற்றமற்றவன்' என்று கூறத் தொடங்கினான்! முரசுகள் ஆர்ப்பரிக்கட்டும் என்று உத்தாவிட்டான் அதிகாரி. மன்னன் பேசியது நின்றது; வெட்டரிவாள் கழுத்தில் விழுந்தது. துண்டிக்கப்பட்ட தலையை ஒரு போர் வீரன் தூக்கிக் காட்டினான், அங்கு இருந்தோருக்கு. வாழ்க குடி அரசு!' என்று கூறினர் மக்கள் கலைந்தனர்; மன்னன் கதை முடிந்தது.

-புத்தகத்திலிருந்து