Skip to content

கலிங்கராணி (ஆழி பதிப்பகம்)

அறிஞர் அண்ணா எழுதிய கலிங்கராணி (ஆழி பதிப்பகம்) - தமிழர்களின் வரலாறு, அரசியல் மற்றும் சமூக விழுமியங்களை ஆழமாகப் பேசும் ஒரு சிறந்த நாவல். சமூக மாற்றத்திற்கான சிந்தனைகள் இதில் உள்ளன.

Category Novel
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 208
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788196258122

Description

பார்த்தீர்களா! நீரே இப்போது தேவாமிருதம் என்று, அந்தக் கதையை நம்பித்தான் கூறுகிறீர்? தேவரும், மூவரும் தேன் பூசிய நஞ்சு! விண், வெளி! ஆங்கு உலகம் கற்பிப்பவன் ஒரு சூதுக்காரன். அதை நம்புகிறவன் ஏமாளி! நம்பிக்கையல்ல! என் நரம்பிலும் அந்த வினை மெல்ல மெல்லப் பரவி வருகிறது. அதினின்று நம்மவரில் தப்பினோர் மிகச் சிலரே. இனி வருங்காலத்திலே இந்த நஞ்சு, நந்தமிழ்நாட்டை என்ன பாடுபடுத்துமோ அறியேன். அன்று நம்மவர் வாழ்ந்ததற்கும் இன்று நாம் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகமாகத்தான் இருக்கிறது. எங்கிருந்தோ இங்கு குடிபுகுந்து போரிடவோ, பாடுபடவோ இசையாமல் பொய்யுரையை மெய்யென்றுரைத்து வாழும் ஆரியருக்கு, அரச அவையிலே இடங் கிடைத்துவிட்டது. மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்களும்!

-புத்தகத்திலிருந்து