ஓர் இரவு (ஆழி பதிப்பகம்)
அறிஞர் அண்ணா எழுதிய ஓர் இரவு - ஆழி பதிப்பகம், காதல், துயரம் நிறைந்த கதை. இந்த நாவல் உணர்ச்சிகரமான அனுபவத்தையும், ஓர் இரவின் முக்கியத்துவத்தையும் விவரிக்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
| SKU | 9788196017378 |
Description
களவாட வந்தவனை ஒரு சுன்னி உபகாரம் செய் என்று கேட்பது. படமெடுத்தாடும் நாகத்தைப் பார்த்து மாணிக்கம் கொடு என்று கேட்பது போலிருக்கிறதா? என் நிலைமை அப்படிப் பட்டது. அதனால்தான், யாரைக் கண்டால் பயத்தால் கூக்குரலிட வேண்டுமோ, அவனைக் கண்டு உதவி கேட்கிறேன். கொஞ்ச நேரம் என் காதலனாக இரு... "தாயே! கும்பிடுகிறேன். நீ வனதேவதையோ, மோகினியோ, என்னை ஒன்றும் செய்துவிடாதே. நான் தாய்க்கு ஒரே மகன்... இனி நான் சத்யமாகத் திருடுவதில்லை." ஐயோ! ஐயோ! முட்டாளே! நான் தேவதையுமல்ல. பிசாசுமல்ல. உன்னிடம் உதவி கேட்கும் ஒரு அபாக்யவதி. கொஞ்ச நேரம், ஒரு மணி நேரம் என்னைத் தாயே, பேயே என்று கூப்பிடாமல், கண்ணே! மணியே! என்று கூப்பிடு. அஞ்சாதே கொஞ்சிப் பேசு.
-புத்தகத்திலிருந்து
