Skip to content

பராசக்தி (ஆழி பதிப்பகம்)

கலைஞர் மு. கருணாநிதி எழுதிய பராசக்தி - சமூக நீதி, நீதிமன்ற வழக்குகள் மற்றும் மனித மனங்களின் ஆழமான போராட்டங்களை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த நாவல்.

Category Novel
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism
SKU 9788119304424

Description

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பலவழக்குகளை சந்தித்திருக்கிறது புதுமையான மனிதர்களைக் கண்டிருக்கிறது ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல! கோவிலிலே குழப்பம் விளைவித்தேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல.. கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக.. பூசாரியைத் தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக...

உனக்கேன் இவ்வளவு அக்கரை? உலகத்தில் யாருக்குமில்லாத அக்கறை என்று கேட்பீர்கள் நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்!

சுயநலமென்பீர்கள் என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது ஆகாரத்திற்காக அழுக்கைச்சாப்பிட்டுத் தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல் என்னைக் குற்றவாளி குற்றவாளி என்கிறார்களே இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்சதூரம் பின்நோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்துவந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கமுடியும் பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில் படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன தென்றலைத் தீண்டியதில்லை நான் ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன் கேளுங்கள் என் கதையை நீதிபதி அவர்களே தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்!

-புத்தகத்திலிருந்து.