தீ பரவட்டும் (ஆழி பதிப்பகம்)
அறிஞர் அண்ணா எழுதிய தீ பரவட்டும் - தமிழ் மொழி, தமிழர் உணர்வு, சுயமரியாதை பற்றிய ஆழமான சிந்தனைகள் நிறைந்த ஒரு புத்தகம். இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 88 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
| SKU | 9789380244167 |
Description
இதற்கு முன்பெல்லாம். கடந்த 10, 15 ஆண்டுகளாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. கிடையாது. கவிகளை மக்கள் கனவிலுங்கூடக் கருதினாரில்லை. தமிழுந் தன்னந்தனியே தமிழரை விட்டுப் பிரிந்து உலவிற்று. உதாரணமாக, அப்பொழுதெல்லாம் தமிழ் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வளவு தொடர்பு இருந்ததென்றால், முருகனுக்கும் தெய்வயானைக்கும் எவ்வளவோ அவ்வளவு. தெய்வயானையை விட்டுவிட்டு வள்ளியைத் தேடிக்கொண்டு முருகன் போவதுபோல், மாணவர்கள் வாத்தியாரை விட்டுவிட்டு வெளியே போய் விடுவார்கள். ஆனால் அந்த நிலை இன்று மாறிவிட்டது. எங்குச் சென்றாலும் தமிழ், தமிழர் என்ற பேச்சுக்களையே நான் பார்த்திருக்கிறேன். ஓரிரண்டு ஆண்டுகளாக ஆங்கிலத்திலேயே பேசுவேன் என்று சபதஞ் செய்து கொண்டிருந்தவர்கள்கூட 'இன்று தமிழிலேயே பேசுவேன்; தமிழிலேயே எழுதுவேன். எண்ணுவேன்' என்று சொல்லுவகை தமிழிலே கவிதைகள், தமிழிலே நாடகங்கள்: தமிழிலே இசைகள்; இவைகளை யாரும் எங்குச் சென்றாலும் பார்க்கலாம். நேற்று கூப்பிட்டிருந்தால் 'வர மாட்டேன்' என்று இன இறுமாப்புடன் இருந்திருப்பவர்கள் கூட இன்று தாமும் தமிழர், தமிழர் இனம் என்று சொல்லிக் கொள்ள முற்படுகிறார்கள். ஆனால், இந்த நிலை என்றும் மாறாமல் நிலைத்திருக்குமா!
-புத்தகத்திலிருந்து
