உலகத் தமிழ்
நெ.து. சுந்தரவடிவேலு எழுதிய உலகத் தமிழ் - தமிழ் மொழி வளர்ச்சி, புலம்பெயர்ந்த தமிழர்களின் ஏக்கம், மற்றும் உலகளாவிய தமிழ் ஆர்வத்தை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119304868 |
Description
இந்திய விடுதலைப் போராட்டத்தின் துணை விளைவுகளுள் ஒன்று, மொழியார்வமும் மொழி மறுமலர்ச்சியும். தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியார்வமும் தமிழ் மறுமலர்ச்சியும் கண்டோம். ஐம்பது ஆண்டுகளாய்ப் பொங்கியெழுந்த தமிழ் வளர்ச்சி, உலக அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது.
தமிழர்கள் தமிழ் நாட்டோடு முடங்கிக் கிடக்கவில்லை; பல்வேறு நாடுகளிலும் குடியிருக்கிறார்கள். அவர்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பீஜி, தென் ஆப்பிரிக்கா, மோரீஸ் ஆகிய நாடுகளில் வாழ்கிறார்கள். அந்நாட்டின் உயிர்நாடிகளாகப் பணி புரிகின்றார்கள். அவர்களில் பலர், இத்தலைமுறையில், தாய் மொழியாம் தமிழோடு நெருங்கிய உறவுகொள்ள முடிவதில்லை. இதனால் ஏற்பட்டது ஏக்கம்.
தமிழ் நாட்டில் ஏற்பட்ட தமிழுணர்வு, பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் ஏக்கம், உலக அறிஞர்கள் தமிழின்பால் செலுத்திய கண்ணோட்டம் ஆகியவை, தமிழுக்காக, அனைத்து நாடுகளின் கருத்தரங்குகளைக் கூட்டத் தூண்டியது. எங்கோ ஒரு பக்கம் அமைதியாக ஒதுங்கி நின்ற தமிழ்க் கப்பல் சில ஆண்டுகளாகப் பெருமிதத்தோடு, பெருங்கடல்களில் பவனிவரத் தொடங்கியுள்ளது.
-புத்தகத்திலிருந்து
