Skip to content

விஷகோப்பை

சி.பி. சிற்றரசு எழுதிய விஷகோப்பை - சாக்ரடீஸ் தத்துவத்தையும், வாழ்க்கையின் நிலையாமையையும் உணர்த்தும் ஒரு சிறந்த படைப்பு. தத்துவம் மற்றும் வரலாறு விரும்பிகளுக்கு ஏற்ற புத்தகம்.

Category Essay
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Philosophy and Thought
SKU 9788119304011

Description

எத்தனையோ போர்களிலே ஈடுபட்டதுதான் ஏதென்ஸ். பிணக் குவியல்களைக் கண்டு கலங்காதிருந்ததுதான் ஏதென்ஸ், கோட்டைகள் சரிந்ததை, கொத்தளங்கள் அடியற்ற மரம்போல் சாய்ந்ததைக் கண்டதுதான் ஏதென்ஸ். போர்க்களத்தில் மாண்ட வீரர்களின் உற்றார் உறவினர் மட்டுமே அழுதனர் அன்று. இன்று அனைவருமே அழுது தீர்த்தனர். சாக்ரடீஸ் சிதைக்கிட்ட தீ மக்கள் கண்ணீரை உலர்த்திவிட்டது. சாவெனும் பெருந்தீங்கு சாகரத்தின் புயலோ என்று அஞ்சிய மக்கள் முன்னால், "சாவே வா!" எனச் சாவெனும் சாகரத்தைத் தாண்டியவன் சாக்ரடீஸ். கால எல்லையின் கடைசி கோடு எது என்று குழம்பியிருந்த மக்கள் முன்னால் சாவின் கடைசி எல்லை இதுவெனக்காட்ட விஷக்கோப்பையைக் கையிலேந்தியவன் சாக்ரடீஸ். பிறந்தனர், இறந்தனர், புழுதி மேடாயினர் பலர். வாழ்க்கை இதுவெனக் காட்டியவன் சாக்ரடீஸ். அதன்படி வாழ்ந்து காட்டியவன்.

-புத்தகத்திலிருந்து