Skip to content

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

முழுக் கவிதைகள் திரட்டு

இன்குலாப் எழுதிய ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - மனித நேயம், சமத்துவம், இயற்கையின் மீதான அன்பை உணர்த்தும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags Life and Society

Description

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்

நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!