சினவயல்
சோ. தர்மன் எழுதிய சினவயல் - குற்ற உணர்வு, மனப் போராட்டம், மற்றும் விதி பற்றிய ஆழமான நாவல். மனித மனதின் இருண்ட பக்கங்களை ஆராய்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 232 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
‘சினவயல்’ பல கொலைகள் செய்த ஒரு கொலையாளியின் கதையை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் நாவல். மனித மனத்தின் இருண்ட பகுதிகளைச் சுமந்து செல்கிறது நாவல். சிறையில் நடந்த ஆறுதலான உரையாடல்களில் வெளிப்படும் கொலையாளிகளின் உணர்வுகளையும், அவர்களின் ஆங்கார மனநிலையையும் ஊடுருவிப் பார்த்த சோ.தர்மன், அவற்றை, ‘பிழைத்த அந்த நொடி’யின் பின்னணியில் கலாபூர்வமாகப் பதிவு செய்கிறார்.
கணேசன் என்ற பாத்திரத்தின் மூலம், கொலை, தற்கொலை, சமூக நீதி, விதி பற்றிய ஆழமான சிந்தனைகள் உருவாகின்றன. அவன் மீண்டும் மீண்டும் அவமானப்பட்டு, தன் வினைகளின் விளைவுகளைத் தாங்கிக்கொண்டு, ‘ஊழின் உட்புறம்’ பார்க்கத் தொடங்குகிறான். உணர்வுகளை அடக்கி ஊழை எதிர்கொள்ளும் மனப் போராட்டங்கள் நாவலாக விரிகிறது. ‘சினவயல்’ தனிமனிதனின், வெஞ்சினம், குற்றம், அவற்றின் விளைவுகள் பற்றிய ஓர் ஆழமான பயணம். தனது மெய்மையைத் தேடி, பின்வாங்க முடியாத பாதையில் பறவை போலப் பறந்து செல்கிறான் கணேசன். இந்த நாவலை வாசிப்பதன் மூலம் நாம் மேற்கொள்ளும் மனப் பயணம் எளிதில் மறக்க முடியாத அனுபவங்களாகும்.
