Skip to content

ஜமீலா (பாரதி புத்தகாலயம்)

சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய ஜமீலா - காதல், தியாகம் நிறைந்த ஒரு அழகான கதை. ராணுவ வாழ்க்கை, கிராமியச் சூழலில் நடக்கும் உணர்வுப்பூர்வமான நாவல் இது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 79
Year 2009
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்கள் எழுதிய “ஜமீலா என்ற குறுநாவலை பூ. சோமசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கித் தந்துள்ளார். இக்கதையின் நாயகி ஜமீலா. அவளது கணவன் ஸாதிக், ராணுவத்தில் பணியாற்றுகிறான். இந்நிலையில், கிச்சினே பாலா என்பவன் ஜமீலாவை ஒருதலையாகக் காதலிக்கிறான். ஆனால் அவளோ தானியார் என்பவனைக் காதலிக்கிறாள். தானியாரும் ஜமீலாவும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். தனது கணவனைவிடவும் தானியாரை அதிகமாக நேசி்க்கிறாள். அவர்கள் இருவரும் ஓடிப் போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களா? என்பதை கதையின் முடிவு தெரிவிக்கிறது. “சிங்கிஸ் ஐத்மாத்தவ்”வின் மூலக்கதையை திரு.பூ. சோமசுந்தரம் மிக அழகாக படம் பிடித்தார் போல் மொழிபெயர்த்திருக்கிறார்.