வளர்ச்சியின் பெயரால் வன்முறை
அ. பாக்கியம் எழுதிய வளர்ச்சியின் பெயரால் வன்முறை - குடிசைப்பகுதி மக்களின் குடியிருப்பு உரிமை, வெளியேற்றம் மற்றும் வளர்ச்சியின் பின்னணியை ஆதாரங்களுடன் அலசுகிறது.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் குடிசைப்பகுதி மக்களை சென்னையின் பூர்வகுடிகள் என்றே சொல்ல வேண்டும். அந்த பூர்வகுடிமக்களின் குடியிருப்பு உரிமை பறிப்பை அலசுகிறது இந்த நூல். இதற்காக சிஏஜி அறிக்கை உட்பட பல்வேறு ஆதாரங்கள் இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. குடிசைப் பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதின் பின்னணி, வளர்ச்சி என்பது உண்மையா? உண்மையென்றால் அது யாருக்கான வளர்ச்சி? உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் யார்? ஏரிகளை ஆக்கிரமித்து கல்லூரிகள், வணிக வளாகங்கள், உல்லாச குடியிருப்புகள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல்.
