மேற்கத்திய மார்க்சியம்
டோமினிக்கோ லோசர்டோ எழுதிய மேற்கத்திய மார்க்சியம் - முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் மார்க்சிய சித்தாந்தங்களின் வரலாற்றுப் பின்னணியை ஆராய்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 344 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
பேராசியர் டோமினிகோ லோசர்டோவால் சித்தாந்தப் படுத்தப்பட்ட மேற்கத்திய மார்க்சியம் புவியியல் ரீதியாக வகைப்படுத்தப்பட்டது அல்ல. அது கருத்தியலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கருத்தியலின் தாக்கங்கள் மேற்குலகிலும் கிழக்குலகிலும் நிலவுகின்றன.
முதலாளித்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் உலகின் மேற்கில் நிகழ்ந்தது. உலகின் பிற பகுதிகளுக்கு மூலதனப் பரவலும், உலக சந்தைகளை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துதல் ஆகிய செயல்முறைகளும் மேற்கிலிருந்தே துவங்கின. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்தலும், நாடுகளை காலனியப் படுத்துதலும் மேற்கிலிருந்துதான் தொடங்கியது. ஏகாதிபத்தியம் பிற நாடுகளின் வளங்களை கொள்ளையடித்தது. பிற நாடுகளின் உழைக்கும் மக்களின் உழைப்பை அடிமைமுறையில் சுரண்டியது. இதில் கிடைக்கும் கொள்ளை லாபத்தில் சிலதை அந்த நாட்டு மக்கள் சிலருக்கு சலுகைகளாக வழங்கியது.
இந்த செயல்முறை போக்குகளுக்கு இணையாகவே மேற்கத்திய மார்க்சிய கருத்துக்கள் தோன்றின. அவை ஆரம்பம் முதலே மார்க்சிய அடிப்படைகளை பலகீனப்படுத்தி திசைதிருப்பும் வகையில் அமைந்தன. ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளிவர்க்கமும், உழைக்கும் மக்களும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராகவும், பிற நாடுகளை காலனியப்படுத்துதலுக்கு எதிராகவும் போராடும் உணர்வுகளை மழுங்கடித்து, தேசிய வெறிகளைத் தூண்ட இந்த கருத்துக்கள் பயன்பட்டன.
சமூகத்தை வர்க்க அடிப்படையில் பகுப்பாயும் வர்க்கக் கண்ணோட்டத்தை மேற்கத்திய மார்க்சியம் மறக்கடிக்கப் பார்க்கிறது. வர்க்கப் போராட்டத்தை அலட்சியப்படுத்துகிறது; அதற்கு பதிலாக பல பசப்பு வாதங்களை முன்வைக்கிறது. பல அடையாளங்களை முன் நிறுத்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனிய, அரைகாலனிய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை பிளவுபடுத்துகிறது."
தற்கால சித்தாந்த போக்குகளை அறிந்து மார்க்சியத்தில் தெளிவு பெற இந்த நூல் உதவும்.
