சலம் (PB)
பா. ராகவன் எழுதிய சலம் (PB) - தொலைந்துபோன நதிக்கரை நாகரிகம், அதர்வ வேதம் பின்னணியில் இந்தியாவின் பிரச்சனைகள் மற்றும் வேர்களை ஆராய்கிறது. ஒரு புதிய கற்பனைப் பயணம்!
| Category | Novel |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Zero Degree) |
| Language | தமிழ் |
| Pages | 768 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Alternate Realities |
Description
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது.
வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி.
‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக்கக் கூடிய காரணங்களைத் தனது அடித்தளமாக அமைத்துக்கொண்டு கற்பனையில் ஒரு நதிக்கரை நாகரிகத்தினை உருவாக்கிக் காட்டுகிறார் பா. ராகவன்.
இன்றைய இந்தியாவில் உயிருடன் வாழும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் எது தொடக்கமோ, அதன் வேர்களை இந்நாவல் ஆராய்கிறது.
