Skip to content

அரூப நெருப்பு

கே. என். செந்தில் எழுதிய அரூப நெருப்பு - வாழ்வின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு. மனித உணர்வுகளின் ஆழமான சித்தரிப்புடன், வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 168
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

எட்டுச் சிறுகதைகள் கொண்ட ‘அரூப நெருப்பு’ கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பு.
வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே தன் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார் செந்தில். வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலம் தன் எழுத்தை உருவாக்க விரும்பும் இவரது கதைகளின் மனிதர்கள் பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும் மரணத்தாலும் வதைப்பவர்கள், வதைபடுபவர்களும் கூட. இந்த இருண்ட உலகை எந்த மனச் சாய்வுமின்றி ‘அராஜகமாக’ச் சித்திரிப்பதில் கே.என். செந்தில் பெற்றிருக்கும் வெற்றிக்குச் சான்று இக்கதைகள்.