Skip to content

என் உளம் நிற்றி நீ

ஞானக்கூத்தன் எழுதிய என் உளம் நிற்றி நீ - நவீன கவிதைகள், வாழ்வின் கோலங்களை எள்ளலுடன் சித்தரிக்கும் கவிதைகள், கவிஞரின் முதிர்ந்த படைப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 184
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான
ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123  கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின்
‘உளம் நிற்கும் நூல்’.

நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில்
பேசுபவை. சில புதிரானவை. சில மர்மமானவை.
சில வெளிப்படையானவை. சில ரகசியமானவை.
சில வினோதமானவை. சில அபத்தமானவை.
சில இயல்பானவை. சில பிரகாசமானவை.
நவீன மனிதனைப் போன்று அதிநவீனமானவை
இந்தக் கவிதைகள்.

விரிவான களங்களிலும் மாறுபட்ட காலங்களிலும் வேறுபட்ட பார்வைகளுடனும் தனித்துவமான கூறல் முறையிலும் துணிச்சலான சோதனை நோக்கிலும்
உருவான இந்தக் கவிதைகள் ஒரு முதிர்ந்த
கவிஞரின் பக்குவப்பட்ட இளமைக்குச் சான்றாக நிற்கின்றன.