Skip to content

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

சிலம்பு நா.செல்வராசு எழுதிய இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் - தமிழ் இலக்கிய மரபுகள், சிற்றிலக்கிய வகைகள் மற்றும் அவற்றின் தனித்துவத்தை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 216
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

“தமிழிலக்கியக் கோட்பாடுகள் அவ்வவ்விலக்கியத்தை அடியொற்றித்தான் நிறுவப்படுதல் வேண்டும். அவ்வாறு ஒரு முயற்சி மேற்கொண்டால் தமிழிலக்கியங்களைத் தனித்தனி இலக்கிய வகைமைகளாகக் கணக்கிடமுடியும். எனவே சிற்றிலக்கியம் என்ற பெயர்ப்பொருத்தத்தைவிடப் ‘பரணி இலக்கியம்’, ‘உலா இலக்கியம்’, ‘பள்ளு இலக்கியம்’ எனச் சுட்டப்பெறுவது தகவுடையது”

என்று அடையாளமொழி மரபை மறுத்து தமிழ் மரபுக்குத் தக்கவாறு பெயர் சூட்டும் வகைமையைக் கண்டுரைக்கிறார் சிலம்பு நா. செல்வராசு