Skip to content

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்

சுரேஷ் குமார் இந்திரஜித் எழுதிய கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் - புனைவும் யதார்த்தமும் கலந்த இந்த நாவல், வாசகர்களின் கற்பனைக்கு சிறகளிக்கிறது. சிறுகதைத் தொகுப்பு எழுத்தாளரின் முதல் நாவல் இது.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 104
Year 2019
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் நாவல் ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’. இந்த நாவலில் ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளரின் மனம், சிந்தனை, பால்யகால வாழ்க்கை, மண வாழ்க்கை ஆகியன சித்திரிக்கப்பட்டுள்ளன. அந்த எழுத்தாளரின் ஐந்து குறுநாவல்களின் பகுதிகள் இந்த நாவலில் உள்ளன. அக்குறுநாவல்களின் மீதப் பகுதிகளை ஒவ்வொரு வாசகரின் மனமும் அவரவர்க்கு ஏற்றவாறு கற்பனை செய்துகொள்ளும் சுதந்திரத்தை இந்த நாவல் வழங்குகிறது. புனைவும் யதார்த்தமும் நுட்பமும் கலந்த நாவல் இது. இந்த நாவலின் பின்னணியில் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கின்றன.