கிழிசல்
பூமணி எழுதிய கிழிசல் - கரிசல் மக்களின் வாழ்வையும், வெக்கையும் நுட்பமாக சித்தரிக்கும் சிறுகதைத் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தில் இயல்புவாத எழுத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும் வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள். அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும் வன்மையையும் காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.
-க. மோகனரங்கன்
