உணர்ச்சி வசப்படலாமா (ப்ராடிஜி தமிழ்)
எழில் கிருஷ்ணன் எழுதிய உணர்ச்சி வசப்படலாமா - உணர்ச்சிகளைக் கையாண்டு மனமுதிர்ச்சி பெற உதவும் புத்தகம். மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வழிகாட்டும் சிறந்த நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
நம் உணர்ச்சிகளை நாம் சரியாகக் கையாள்கிறோமா? அடிக்கடி கோபப்படுகிறோம். பதற்றம் அடைகிறோம். சிரிக்க மறுக்கிறோம். தனிமையில் அழுகிறோம். நம் உணர்ச்சிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள்.
உணர்ச்சிகளைக் கையாளத் தெரிந்தால் என்ன பிரயோஜனம்? மற்றவர்கள் வியக்குமளவுக்கு மனமுதிர்ச்சி பெற்றவராக ஆகிவிடமுடியும். வருங்காலத்தில் மிகச் சிறந்த வெற்றியாளாராக நீங்கள் மாற வேண்டுமெனில் உங்களுக்கு இந்தத் திறமை அவசியம் இருந்தாக வேண்டும்.
இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.
