தோழர் திருமாவளவனோடு
சில பதிவுகள்
பிரபாகல்விமணி (கல்யாணி) எழுதிய தோழர் திருமாவளவனோடு - விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு, போராட்ட நினைவுகள் மற்றும் சமூக அங்கீகாரம் குறித்த ஒரு முக்கியமான நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
எழுச்சித் தமிழர் அவர்களோடு தான் சேர்ந்து போராடிய சம்பவங்கள் பலவற்றை பேராசிரியர் பிரபாகல்விமணி (கல்யாணி) இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார். நினைவுபடுத்திப் பார்த்தால் இன்னும் பல போராட்டங்கள் அவரது ஞாபக அடுக்குகளில் தென்படக்கூடும். தன்னைப் போன்ற மனித உரிமைப் போராளிகளுக்கு வெகுமக்கள் இயக்கமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு மிகப்பெரும் பாதுகாப்பை வழங்குகிறது என்பதை அவர் இந்த நூலில் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போலவே பேராசிரியர் பிரபாகல்விமணி போன்றவர்களின் ஆதரவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய சமூக அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ரவிக்குமார்
