வலசைப் பறவை (மணற்கேணி பதிப்பகம்)
ரவிக்குமார் எழுதிய வலசைப் பறவை - உலக கவிதைகளின் சிறந்த மொழிபெயர்ப்பு, பசி, வேதனை, போராட்டம் போன்ற உணர்வுகளைத் தழுவி உங்கள் மனதை உருக்கும் கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | மணற்கேணி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள பலநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளில் எனக்கு ஏனோ ஒரே குரலே கேட்கிறது – கவிதையின் குரல். பசி, துன்பம், வேதனை, போராட்டம், எதிர்ப்பு இவை எல்லாம் காற்றைக் கவனிப்பது போல் தான் தொனிக்கின்றன. புறநகர் குளத்தில் நடுங்கும் அமைதியின்மை, கல்லைப்போல் ஆற்றுக்குள் விழும் கிராமம், சாண்ட்விச் போன்ற அப்பாவின் நினைவு இவைகள் எல்லாம் – ஒரு ஆச்சரியமான உலகத்தை எனக்குக் காட்டுகின்றன. உலகத்தின் மிகவும் வேதனையான குரல்கள் கவித்துவ குரல்கள் தாம் என்று சொல்லாமல் சொல்லும் கவிதைகள். மொழிபெயர்ப்பாளன் தனது மொழியைக் காணும்போதுதான் மொழிபெயர்ப்பின் மொழியையும் கண்டடைகிறான். மிகமுக்கியமான தொகுப்பு இது.
– தமிழவன்
