திருநிழலும் மண்ணுயிரும்
கொங்கு மண்ணின் தொல்லியல் நினைவுகள்
பா. மீனாட்சி சுந்தரம் எழுதிய திருநிழலும் மண்ணுயிரும் - கோவை வரலாறு, தொன்மை மற்றும் மண்ணுயிர்களின் முக்கியத்துவத்தை தொல்லியல் சான்றுகளுடன் அறியலாம்.
| Category | Article |
|---|---|
| Publisher | நிமிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
கோவை பகுதியை பற்றி பலரும் அறிந்தராத பல வரலாற்று செய்திகளை தொல்லியல் சான்றுகளுடன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி கட்டுரைகளாக எழுதி வந்தவர் கோவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பா மீனாட்சி சுந்தரம் அவர்கள். இதற்காக அவர் கள ஆய்வு பணிகளை சிரத்தையோடு மேற்கொண்டவர்.
அவ்வாறு பா மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதிய கோவை பகுதியை சார்ந்த நிலம், வரலாறு, தொன்மை, மக்கள் குறித்த செய்திகட்டுரைகளில் சில இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் நூலாசிரியர் ஒரு நிகழ்வில் ’இதுவல்லவோ எங்கள் கோவை’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையை கோவையை சேர்ந்த கல்வெட்டு அறிஞர் காலஞ்சென்ற திரு துரை சுந்தரம் அவர்கள் ஒரு நீண்ட கட்டுரையாய் எழுதிய படைப்பு இந்நூலில் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
