Skip to content

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (தொகுதி – 2)

தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (தொகுதி – 2) - மனிதநேயம், வாழ்க்கை மேம்பாடு, நற்பண்புகள் குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த புத்தகம்.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 152
Year 2025
Format Paperback
Tags Life and Society
SKU 9788198435606

Description

அடிகளாரின் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ நூலின் மையம் மனிதமும் மனிதநேயமும் என்று சொன்னால் மிகையாகாது. இந்நூல் முழுக்க உள்ள பல்வேறு இலக்கியச் சொல்லாடல்கள், கதைகள், நிகழ்வுகள். மனிதர்களின் செயல்பாடுகள், தரவுகள் உள்ளிட்டவை மனித வாழ்வை மேம்படுத்துவதற்கு வழித்துணையாய் அமைந்திருப்பவை. வாழ்வு என்ற கடினமான மலைவழிப்பாதையில் செல்வதற்கு வெளிச்சமாய், வழிகாட்டியாய். திசைகாட்டியாய் ‘குன்றின் மேலிட்ட விளக்காய்’ இந்நூல் அமைந்துள்ளது எனலாம்.

மனித வாழ்விற்கு அடிப்படையான, அவசியமான குணங்களையும் மனித வாழ்வை அன்பின் வழியும் மனிதநேயத்தின் வழியும் வழிநடத்தும் குணங்களையும் இந்நூலின் வழி அடிகளார் வலியுறுத்துகிறார். அந்த ஒளியைப் பின்பற்றி வாழ்வை நலமாக்கிக் கொள்ளுதல் நமது கடமை. இந்நூலின் நோக்கமும் பயனும் அதுவே.

-ஆர்.பாலகிருஷ்ணன் (இ.ஆ.ப.)