நூறாண்டுகால மலையாளக் கவிதைகள்
ஸ்ரீநாராயணகுரு முதல் தன்யா வேங்கச்சேரி வரை நூறாண்டுகால மலையாளக் கவிதைகள் - மலையாளக் கவிதையின் வளர்ச்சி, வரலாறு மற்றும் சிறந்த கவிதைகளை இந்நூல் வழங்குகிறது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788198445926 |
Description
இம்மலையாளக் கவிதைத் தொகுப்பில் ஸ்ரீநாராயணகுருவின் கவிதை தொடக்கமாக இன்றைய இளம் கவிஞர் தன்யா வேங்கச்சேரி ஈறாகத் தமிழாக்கம் செய்யப்பட்ட 24 மலையாளக் கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பிலுள்ள குமாரனாசானின் ‘வீழ்ந்த மலர்’ (வீணா பூவு) 1908இல் வெளிவந்தது. தன்யா வேங்கச்சேரியின் கவிதை சென்ற ஆண்டு 2023இல் வெளிவந்துள்ளது. ஆகவே, பல்வேறு போக்குகளையும் மாற்றங்களையும் கொண்டு வளர்ந்துள்ள மலையாளக் கவிதையின் நூறாண்டுகால வளர்ச்சிநிலையை எடுத்துக்காட்டும் விதமாக இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் மலையாளக் கவிதையின் வரலாற்று ஓட்டங்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.
