Skip to content

சர்வாதிகாரம் குறித்து

இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள்

டிமோத்தி ஸ்னைடர் எழுதிய சர்வாதிகாரம் குறித்து - ஜனநாயகம், சர்வாதிகாரம் மற்றும் குடிமக்களின் பொறுப்புகள் குறித்து ஆழமான பார்வை. சமூக அரசியல் காரணிகளை ஆராய்கிறது.

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language தமிழ்
Pages 92
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788123440644

Description

இந்நூல் சர்வாதிகார அரசுகளின் தோற்றம்
அவற்றை தோற்றுவிக்கும் பருமனான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் நூல் அல்ல;

மாறாக மேற்கு நாடுகளின் சனநாயக அமைப்புகளுக்குள்ளேயே வாழும் சனநாயகத்தை நம்பும் தனிநபர்களின், குடிமக்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றிய நூல் இது.

 

குடிமக்கள் அக்கறையின்றிப் போய்விடும்போது சனநாயகம் தனக்குள்ளிருந்தே சர்வாதிகாரத்துக்கான சாத்தியங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை விளக்கும் நூல் இது.

 

சனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அதன் குடிமக்கள் நம்பியிருந்தால் போதாது, மாறாக,சனநாயகத்தின் தினசரி செயல்பாட்டை அதன் ஒவ்வொரு குடிமகனும் குடிமக்களும் ஒவ்வொரு நாளும் எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும்
நூல் இது.

 

அரசு நிர்வாகம், தேர்தல், அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் போன்ற பருமனான நிகழ்வுகளோடு மட்டும் திருப்தி அடைந்து விடாமல், அதன் நுண்மையான செயல்பாடுகளைக் குடிமக்கள்
அவ்வப்போது தமது உரிமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது
என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.