இன்சொலினதே அறம்
சொல்லாயுதம் தொகுதி -2
கவிபாஸ்கர் எழுதிய இன்சொலினதே அறம் - இன நீதி, சமூக நீதி மற்றும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் ஒரு முக்கியமான நூல். அரசியல் விமர்சனங்கள் மற்றும் இன விடுதலை குறித்த ஆழமான சிந்தனைகள் இதில் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | பன்மை வெளி |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
உள்ளதை உள்ளபடி உலக நியதிப்படி நாம் பேசுகிறோம்! இனநீதி கிடைக்காத நாட்டில் சமூகநீதி கிடைக்காது. இனநீதி மீட்பிற்கு முன்னுரிமை கொடுக்கும். அதேவேளை சமூகநீதிக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது.
"தமிழர்களே. தனிமனித பலவீனத்தைத் தமிழ் இனத்தின் பலவீனமாக மாற்றிவிடாதீர்! அச்சம் உள்ளோர் ஒதுங்கி கொள்ளுங்கள்: அதை இனத்தில் பரப்பாதீர்! தமிழ்த்தேசியம் என்பது இன விடுதலைச் சொல்; இறையாண்மை மீட்புச் சொல்: வெகுமக்கள் எழுச்சிச் சொல்"
இரட்டை வேடம் போடும் பதவி வேட்டைக்காரர்களின் தமிழ்ப் பற்று பசப்புகளை அடையாளம் காண்பது மிகமிகத் தேவை! அதேவேளை. அதைச் சொல்லியே காலத்தை ஓட்டுவது அல்லது அரசியல் நடத்துவது இன்னொருவகை ஏமாற்றுச் செயலாகிவிடும்!
