கோழைத் தலைவர்கள் மக்களையும் கோழைகள் ஆக்குவர்!
பெ. மணியரசன் எழுதிய கோழைத் தலைவர்கள் மக்களையும் கோழைகள் ஆக்குவர்! - திராவிட அரசியல், பாசிசம் மற்றும் தமிழின உரிமை குறித்த ஆழமான கட்டுரைத் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | பன்மை வெளி |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழர்களின் மரபு, அறம் - அறிவு - வீரம் ஆகிய அடித்தளத்தில் உருவாகி வளர்ந்திருப்பதாகும். ஆனால், தமிழ் மொழி மறுப்பு -தமிழின மறைப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாக உள்ள திராவிடம். ஆரியத்தின் பங்காளி என்பது மட்டுமின்றி, தமிழர்களின் மரபான அறிவு - அறம் வீரம் ஆகியவற்றுக்குப் புறம்பான கோழைத் தனமான அரசியல் பண்பாட்டை வளர்த்து, மக்களில் கணிச மானோரையும் கெடுத்து வைத்திருக்கிறது என்பதை விளக்கும் "கோழைத் தலைவர்கள் மக்களையும் கோழைகள் ஆக்குவர்" என்ற ஒரு கட்டுரையின் தலைப்பே இந்நூலுக்கும் சூட்டப்பட்டுள்ளது.
வலுவான ஆதாரங்களோடு, தெளிவான தர்க்கங்களோடு, உணர்ச்சிகரமான சொல்லாடலில் ஐயா பெ. மணியரசன் எழுதியி ருக்கிற பன்முகக் கட்டுரைத் தொகுப்பான இந்நூல், தமிழின உரிமையில் அக்கறையுள்ள அனைவருக்கும் விழிப்புணர்வூட்டும் நூலாக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இந்தியத்தேசியம் என்பதன் உள்ளீடாக விளங்கும் தன்மையே பாசிசம் என இந்நூலாசிரியர் விளக்குவதும், திராவிடம் என்பதன் பொய் முகத்தைக் கிழித்துக் காட்டுவதும் வெறும் எதிர்நிலைத் திறனாய்வாகக் குறுகிவிடாமல், அவற்றுக்கான மாற்றுக் கொள்கை களையும் திட்டங்களையும் சொல்வதுதான் இந்நூலின் தனிச்சிறப்பு ஆகும்!
