வெண்மணித் தீ வெளிச்சத்தில் காங்கிரசு – திராவிட கம்யூனிச அரசியல்
பெ. மணியரசன் எழுதிய வெண்மணித் தீ வெளிச்சத்தில் காங்கிரசு - திராவிட கம்யூனிச அரசியல், வெண்மணிப்படுகொலை பின்னணியில் திராவிட மற்றும் கம்யூனிச அரசியலை அலசுகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பன்மை வெளி |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
உயிர் காக்க ஒரு குடிசைக்குள் ஒடுங்கியிருந்த 44 பேரைத் திரிகளாக்கி விண்ணுயர்ந்து எரிந்த பெரு நெருப்பின் பெயர் வெண்மணி! தமிழ்ச்சமூக உள் கட்டமைப்பை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள வெண்மணித்தீயின் வெளிச்சம் வாய்ப்பளித்தது.
திராவிட இயக்கம் சாதியை நீக்கிவிட்டது. சமத்துவத்திற்கான சமூக நீதியை நிலை நாட்டிவிட்டது என்று அன்றாடம் போலிப் புகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. ஐம்பதாண்டு களாகத் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிதான் நடக்கிறது.
சாதி ஒழிப்பு பேசிய, தேர்தலில் போட்டியிடாத பெரியார் வெண்மணியில் 44 பேரை எரித்துக் கொன்ற கயவர்களைக் கண்டிக்காமல் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்தார். கம்யூனிஸ்ட்டுக் கட்சியைத் தடை செய்யக் கோரினார். கொலைகாரக் கோபாலகிருட்டிணனின் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை தடை செய்யக் கோரவில்லை!
வர்ண சாதி ஒடுக்குமுறைச் சிந்தனை பிராமணியம்! அதன் ஆதிக்கத்தை அடையாளம் கண்டு எதிர்க்காதவர்கள் கம்யூனிஸ்டுகள்! சி.பி.எம்- சி.பி.ஐ.கட்சிகளின் திட்டங்களில் பிராமணிய சமூக ஆதிக்கம் கூறப்படவில்லை.
