Skip to content

மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்

சோவியத் அறிஞர்கள் எழுதிய மகாகவி பாரதி பற்றி - பாரதியின் கவிதைகள், புரட்சி எண்ணங்கள், மற்றும் தேசபக்தி கருத்துக்களை ஆழமாக ஆராய்கிறது இந்நூல்.

Category Essay
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119919079

Description

ஆங்கில மகாகவி ஷெல்லியை, பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று இலக்கிய விமர்சகர்கள் பலரும் குறிப்பிடுவர். அதேபோல் பால்ய வயதிலேயே தனது கவிதைத் திறனைப் புலப்படுத்தியவனும், பதின் பருவத்திலேயே தன்னை ஷெல்லிதாசன் என்று கூறிக் கொண்டவனுமான தமிழ்நாட்டின் தேசிய மகாகவி சுப்பிரமணிய பாரதியையும் (1882-1921) நாம் 1905-07 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் குழந்தை என்றே குறிப்பிடலாம். உண்மையில், இந்த ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்துதான், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி தேசிய கவியாக மலர்ந்து தேசபக்திக் கவிதைகளைப் பொழிந்து தள்ளினான். இந்தக் கால கட்டத்தில் சகல விதமான அடிமைத்தனத்தையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து, சுரண்டப்பட்டவர்களின், தாழ்த்தப் பட்டவர்களின் விடுதலைக்காகவும், வறுமையையும், மிடிமையையும் ஒழிப்பதற்காகவும், மனித குலத்தின் முன்னேற்றத்துக்காகவும், மாந்தர்கள் மத்தியில் அமைதியும், அன்பும் நிலவுவதற்காகவும் பாடுபட்ட மாபெரும் மனிதாபிமானியாகவும், புரட்சிகரக் கற்பனாலங்காரக் கவிஞனுமாகவுமே பாரதி விளங்கினான். இந்தக் காரணங்கள் யாவும்தான் பாரதியின் வாழ்வையும் படைப்புக்களையும் அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்திலேயே ஆராயப் புகுமாறு சோவியத் நாட்டு அறிஞர்களைத் தூண்டின எனலாம். கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில், பாரதியை ஆழமாகவும் நுண்ணோக்கோடும் ஆராய்ந்து, அவனது படைப்புக்களை சோவியத் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதில் சோவியத் அறிஞர்கள் எத்தகைய போற்றத்தக்க பெரும் பணியை ஆற்றியுள்ளனர் என்ற உண்மைக்கு இந்நூல் சான்றாக விளங்குகிறது.