நான் கண்ட பெரியவர்கள் (பரிசல்)
அ. ச. ஞானசம்பந்தன் எழுதிய நான் கண்ட பெரியவர்கள் (பரிசல்) - தன்னம்பிக்கை தரும் வாழ்க்கை அனுபவங்கள், மகான்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் ஆசீர்வாதங்களை இந்நூலில் காணலாம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
| SKU | 9788119919932 |
Description
எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஒரு தமிழாசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்த எனக்கு, இறைவன் எத்தனை வாய்ப்புகளைத் தந்து என்னை வளர்த்துள்ளான் என்பதை நினைக்கும்போது, அச்சம் கலந்த வியப்பு என்னை ஆட்கொள்கிறது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத பெரியவர்களையும், மகான்களையும் அருகிற் சென்று பார்க்கும் வாய்ப்பு மட்டுமா தந்தான் அவர்களோடு பேசவும், அவர்கள் எதிரே சொற்பொழிவாற்றவும், அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் அல்லவா வாய்ப்புகளைத் தந்தான்!
இந்நூலில் கூறப்பெற்றுள்ள மாமனிதர்கள், வரலாறு படைத்தவர்கள். அவர்கள் மாமனிதர்களாக ஆவதற்கு அவர்களின் தூய எண்ணமும் ஆயிரக்கணக்கான செயல்களும் துணைபுரிந்தன. பல்வேறு பரிமாணமமுடைய இவர்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் மிகப் பெரிய வரலாற்று நூலே எழுதலாம். ஆனால், என்னுடைய நோக்கம் அதுவன்று. எவ்விதச் சிறப்பும் இல்லாத என்போன்ற ஒருவனிடம் இந்த மாமனிதர்கள் காட்டிய அன்பு, பரிவு, செய்த உபகாரம் என்பவற்றில் சிலவற்றை மட்டுமே இங்குக் குறித்துள்ளேன்.
