படுக்காளி
அ. பிரகாஷ் எழுதிய படுக்காளி - வத்திராயிருப்பு கிராமத்தின் உண்மைச் சம்பவங்கள், மக்களின் வாழ்க்கை மற்றும் சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
| SKU | 9788119919352 |
Description
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி இயற்கை சூழ்ந்த ஒரு கிராமம். விருதுநகர் அளவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டு அளவிலும் கலவரத்துக்கு பெயர் போன கிராமமாகும். வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் பதட்டமான கிராமங்களில் வ.புதுப்பட்டி கிராமத்திற்கு முதல் இடம் உள்ளது. கலவரத்தால் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இங்கு வாழ்கின்ற ஆர்.சி தெரு மக்களை பெருமளவில் புறக்கணிக்கவே செய்திருக்கிறார்கள்.
வ.புதுப்பட்டியில் ஆர்.சி தெரு தனித்துவம் மிக்க ஒரு தெருவாகவே இருக்கின்றது. இந்தத் தெருவில் வாழ்கின்றவர்களை அடாவடிக்காரர்கள், கலகக்காரர்கள், சேட்டைக்காரர்கள் என்றெல்லாம் பொது வெளியில் சொல்லப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல என்பதை இந்த கதைகளில் காண முடியும். ஆர். சி தெருவில் வாழ்கின்ற மக்கள் சுயமானவர்களாகவும் தனித்துவம் மிக்கவர்களாகவும் அன்பு பாசம் கொண்டவர்களாகவும் ஒழுக்கப் பண்பை கடைபிடிக்கக் கூடியவர்களாகவும் வாழ்கிறார்கள் என்பதனை இக்கதைகளில் அறிய முடியும்.
