Skip to content

பாதையில் பதிந்த அடிகள் (பரிசல்)

ராஜம் கிருஷ்ணன் எழுதிய பாதையில் பதிந்த அடிகள் - மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்த வரலாற்றுப் பொக்கிஷம்! குடும்பம் மற்றும் அரசியல் யதார்த்தங்களை அறிய சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119919635

Description

நிறைவைத் தந்தது!

ராஜம் கிருஷ்ணனின் நெடுங்கதை நிறைவைத் தந்தது. உலக நாடுகளில் கம்யூனிசம் ஒரு கேள்விக்குறியாகி வரும் இந் நேரத்தில் ஆசிரியை அந்தக் கொள்கையை எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று சந்தேகப்பட்டேன். கூறவேண்டியதைத்தான் கூறியிருக்கிறார், 40 ஆண்டுகளுக்கு முந்தைய குடும்பம், அரசியல் பற்றிய யதார்த்த நிலையை ஆசிரியை கண் முன் கொண்டு வந்திருந்தார். ஆசிரியைக்கு நன்றி

-சி.மூர்த்தி
கொடுவாய்

ஒரு மைல் கல்!

ராஜம் கிருஷ்ணனின் பாதையில் பதிந்த அடிகள என்ற நிஜ வாழ்க்கைத் தொடரைப் படித்து வந்தேன். சற்றும் மிகைப்படுத்தாமல் இக் காவியத்தைப் படைத்த ராஜம் கிருஷ்ணனுக்கு இக் கதை ஒரு  மைல் கல். 

-எம்.சந்திரசேர்
மேட்டு மகாதானபுரம்

தமிழிலக்கியத்திற்குப் பெருமை!

மணலூர் மணியம்மாளின் தீரத்தை, போராட்டத்தை சாகசத்தை, தியாகத்தை மக்கள் அறியாது மண்ணோடு மண்ணாகப் புதைந்து போல இருந்ததை வரலாறாக்கி சரித்திரம் படைத்திருக்கும் ராஜன் கிருஷ்ணனின் பணி தமிழிலக்கியத்திற்கும் பெருமை சேர்க்கும்

-தாரகை
பெங்களூரு-13

வரலாற்றுப் பொக்கிஷம்

பாதையில் பதிந்த அடிகள், தொடர் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் வரலாற்றுப் பொக்கிஷம்.

-ஜே.ஹெச் எம் பத்மநாபன்
கோவை