சிறுதெய்வக் கோயில்கள்
வழிபாடுகள் - சடங்குகள் - நம்பிக்கைகள்
வசந்த் எழுதிய சிறுதெய்வக் கோயில்கள் - நாட்டுப்புறச் சமயம், சிறுதெய்வ வழிபாடு, தமிழியல் ஆய்வுகள் குறித்த முக்கியமான நூல். பண்பாடு மற்றும் நம்பிக்கைகளை அறிய உதவும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நாட்டுப்புறத் தெய்வம், நாட்டுப்புறச் சமயம், நாட்டுப்புறவியல் என்னும் சொல்லாடல்களும் சிறுதெய்வம், பெருந்தெய்வம், சிறு மரபு, பெருமரபு என்னும் சொல்லாடல்களும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவாதங்களை ஏற்படுத்திய கருத்தாடல்கள் ஆகும். இந்த நுண் அரசியலை ஒட்டு மொத்த தமிழினத்தின் மைய ஒட்டமாகவே மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இது தமிழ் மக்களின் இனம், மொழி, பண்பாடு, சமயம் என ஒட்டுமொத்த கூறுகளுக்கும் பொருந்தும்.
மக்கள் தெய்வம் குறித்த வழிபாடுகள் சடங்குகள், நம்பிக்கைகள் பற்றியதான இந்த நூல் பல வகையில் என்னைக் கவர்வதாக உள்ளது. இதற்கான காரணங்கள்: 1.நான் பிறந்த சீர்காழி வட்டாரத்தைக் களமாகக் கொண்டமைவது. 2.மக்கள் சமயம் குறித்த கோட்பாட்டை உருவாக்கும் வகையில் அடிப்படைத் தரவுகளைக் கொண்டமையது. 3.ஓர் இளையர் குழு பல்வேறு கருத்துச் சிதறல் கொண்ட ஒரு சமூகத்தில் சிதறாது கவனமாக ஆய்வை நிகழ்த்தியது. 4.நீண்ட நாட்களுக்குப் பின் ஓர் ஆசிரியர் மாணவர் உறவமைத்த பரம்பரைக்கு அடித்தளம் அமைத்தது. இவ்வாறான பல காரணங்களால் இந்த நூல் என் கருத்தைக் கவர்ந்துள்ளது.
இந்நூலில் உள்ள கட்டுரைகளை எழுதிய அ. வசந்த் எம்.ஏ. ரா. ராஜேஷ் எம்.ஏ., தி.பிரித்திகா எம்.ஏ., ர. பிரியதர்ஷினி எம்.ஏ. ஆகிய அனைவரையும் மனதாரப் பாரட்ட வேண்டும். தமிழியல் ஆய்வின் எதிர்காலம் பற்றிக் கவலைகள் தோன்றியுள்ள சூழலில் இவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றனர்.
சமூக மானிடவியல் பேராசிரியர்
-சிலம்பு நா.செல்வராசு
