தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் (பரிசல்)
அவ்வவை தி. க. சண்முகம் எழுதிய தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் (பரிசல்) - சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் பங்களிப்பு, தமிழ் நாடக வரலாறு மற்றும் கலை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய ஆதாரம்.
| Category | Drama |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119919420 |
Description
நாடக உலகம் அப் பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள் தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது.
சொல்லவேண்டியதில்லை முழுப் பெயரையும் சுவாமிகள் என்றாலே போதும், தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும்.
சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலைவணங்கிப் பாராட்டினர்.
ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவது கூடக் கௌரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கர தாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் நாடக மேடையில் தீந்தமிழ்ப் பாடல்களைப் பொழிந்து தமிழுலகை மகிழ்வித்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
