ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டாம் பாகம்)
ஏ.கே. செட்டியார் எழுதிய ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டாம் பாகம்) - மறைக்கப்பட்ட வரலாறு, சுயசரிதை, மற்றும் தேசத்தின் அடையாளத்தை மீட்டெடுக்கும் அரிய நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 1136 |
| Year | 2016 |
| Format | Hardcover |
| Tags | History, Politics, and Culture |
Description
ராகுல சங்கிருத்தியாயானைப் பேசும் நாம், ஏ.கே. செட்டியாரைப் பேசத் தவறிவிட்டோம்.யுவாங் சுவாங் பாடத்தில் வைத்து செட்டியாருக்கு நாம் வஞ்சகம் செய்துவிட்டோம். மனுச்சிய படிக்க கற்றுத்தந்த நாம் ஒரு மாமனிதனைக் காணாமற் போனோர் பட்டியலில் போட்டுப் புதைத்துவிட்டோம். மார்க்கோபோலோவும், வாஸ்கோடகாமாவும் தான் நமக்குப் பயணிகள். மிளகைத் தேடி இந்தியா வந்த வியாபாரி ஓர் அறிவாளியாகிவிட்டான். காப்பிக் கொட்டையைக் கொண்டு வந்து இந்தியாவில் விதைத்த இந்திய வேளாண்மை விஞ்ஞானி வரலாற்றிலிருந்து வெட்டி வீழ்த்தப்பட்டான். தேசபிதா படத்தை டிரங்கு பெட்டியில் வைத்து, தலையில் தூக்கிச் சுமந்த சுத்தயோகி ஒருவரின் சுயசரிதையை நாம் சுத்தமாய் மறந்துவிட்டோம். அழுத்திச் சொன்னால் நம் அடையாளம் எதுவென்பதையே அணுவணுவாய் இழந்துவிட்டோம். இக்குறையை இத்தொகை நூல் தீர்க்கும்.
