Skip to content

புத்தர் போதனைகள்

புத்தர் எழுதிய புத்தர் போதனைகள் - துக்கம் நீக்கும் வழிகள், ஆசைகளை வெல்லுதல், மன அமைதி பெறுதல் ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category Religion
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 144
Year 2010
Format Paperback
Tags Faith and Spirituality

Description

துக்கம் - துக்க நிவாரணம் என்ற ஒரு விஷயத்தைப்
பற்றியே நான் போதனை செய்கிறேன்.

ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;
துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

கர்ம விதியை மாற்ற இயலாது. பிரார்த்தனைகள்
பயனற்றவை, ஏனெனில் அவை வெறும் சொற்களேயாம்.

ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது;
ஆசைப்பட்டதிலிருந்து அச்சம் தோன்றுகிறது;
ஆசையற்றவனுக்குச் சோகமில்லை; பயம்தான் ஏது?

தாமரை இலை மேல் தண்ணீர் போலவும்,
ஊசி முனை மேல் கடுகு போலவும், இன்பங்களோடு
ஒட்டாமலுள்ளவன் எவனோ, அவனையே நான்
பிராமணன் என்று சொல்வேன்.