ஒரு தலித் போராளி: வாழ்வும், காட்டிய வழியும்
அ. மார்க்ஸ் எழுதிய ஒரு தலித் போராளி: வாழ்வும், காட்டிய வழியும் - டி.எம். மணி வாழ்வும், தலித் உரிமைப் போராட்டப் பங்களிப்பும் இதில். சமூக மாற்றத்திற்கான வழிகாட்டி!
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 54 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
| SKU | 9788196021214 |
Description
தீண்டாமையின் தோற்றம், ஒழிப்பு முதலானவை குறித்து இங்கு நிலவும் கோட்பாடுகளை டி.எம். மணி தலைகீழாகத் திருப்பிப் போட்டார். மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்தார். தீண்டப்படாத மக்களின் தாழ்வு என்பது “வணங்குகிற கடவுளால் வந்தது. வணங்குகிற கடவுளை மாற்றாத வரை தீண்டப்படாத மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் காண முடியாது. சமூக விடுதலையைப் பெற முடியாது. ஒன்று திரண்டு போராடு, புரட்சி செய் என்பதெல்லாம் தற்காப்பு நடவடிக்கையே அன்றி, சமூக விடுதலையைத் தந்து விடாது” என்றுரைத்தார்.
- நூலிலிருந்து ...
தமிழக தலித் உரிமைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமைகளில் ஒருவரான டி.எம். மணி அவர்களின் வாழ்வு, போராட்டம் பற்றிய சுருக்கமான, கச்சிதமான அறிமுக நூல் இது.
