Skip to content

திருமுகம்: ஈரானிய நாவல்

எட்டு உலக மொழிகளில் 2,50,000 பிரதிகளைத் தாண்டி...

முஸ்தஃபா மஸ்தூர் எழுதிய திருமுகம்: ஈரானிய நாவல் - காதல், மனித உறவுகள் மற்றும் சமூகத்தின் ஆழமான பார்வையை வழங்கும் ஒரு சிறந்த நாவல் இது.

Category Novel
Publisher சீர்மை
Language தமிழ்
Pages 144
Year 2021
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக  அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

இது ஐயத்தையும் நம்பிக்கையையும் பற்றிய கதை. வேட்கையையும் தடுமாற்றத்தையும் பற்றிய கதை. காதலையும் தொலைதலையும் பற்றிய கதை. இது மனிதனின் கதை.