Skip to content

பாரதியாரின் பகவத்கீதை

பாரதியார் எழுதிய பாரதியாரின் பகவத்கீதை - துன்பம் நீக்கி, பேரின்பம் அடைய உதவும் கீதையின் போதனைகள், மன அமைதி மற்றும் மேம்பட்ட வாழ்க்கைக்கான வழிகாட்டி.

Category Religion
Publisher சிக்ஸ்த் சென்ஸ்
Language தமிழ்
Pages 136
Year 2004
Format Paperback
Tags Faith and Spirituality

Description

மனிதன் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறான். பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான். அதற்கான வழி என்ன என்றும் சொல்லித் தருகிறது கீதை.

எல்லாவற்றிற்கும் மேலாகப் பூவுலகவாசிகள் அனைவரும் மேம்படுவதற்கான அனைத்து வழிகளையும் அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டுமென்பதுதான் கீதை படைக்கப்பட்டதற்கான நோக்கமே.மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை.

உலகப் பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். மனச்சோர்வு, கவலை, கலக்கம், பயம், சந்தேகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசிக்கிறது கீதை.வேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத் கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார்.