நாம் நனைந்த மழைத்துளியில்
காதல் கதைகள்
ஜி. ஆர். சுரேந்தர்நாத் எழுதிய நாம் நனைந்த மழைத்துளியில் - உணர்ச்சிகரமான காதல் கதைகள், இளையராஜா மீதான ரசிகனின் அன்பை அழகாகச் சொல்லும் சிறுகதைத் தொகுப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
ஆனந்த விகடன் இதழில் பிரசுரமாகி, இந்நூலில் உள்ள இளையராஜா சிறுகதை குறித்து தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையிலிருந்து:
இசைஞானி இளையராஜாவின் 70வது பிறந்தநாளுக்கு ஒரு வாரம் முன்பாக, ஒரு பிரபல தமிழ் வார இதழில் பிரசுரமான 'இளையராஜா' என்ற சிறுகதை, இளையராஜா ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.
உணர்ச்சிகரமான காதல் கதைகள் எழுதுவதில் தனக்கென்று தனி இடம் பெற்றுள்ள எழுத்தாளர் ஜி.ஆர். சுரேந்தர்நாத் எழுதிய இச்சிறுகதை, ஒரு இசைமேதைக்கு ஒரு ரசிகனின் பூங்கொத்து.
கவிஞர்கள் மு.மேத்தா, நா.முத்துகுமார், சிநேகன் மற்றும் இளையகம்பன் ஆகியோர் இச்சிறுகதை குறித்துக் கலந்துரையாடி, அந்த உரையாடலின் வீடியோ பதிவு இளையராஜாவின் அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சிறுகதை இந்த அளவிற்கு கவனஈர்ப்பைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.
