கோட்டையின் கதை
ப. திருமாவேலன் எழுதிய கோட்டையின் கதை - சென்னையின் வரலாறு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முக்கியத்துவம் மற்றும் தமிழகத்தின் அரசியல் பின்னணியை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
சென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகத்துக்கு மாறுகின்றன! வரலாற்றுப் புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது. சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரர்கள் வளைத்துப் போட்டனர். சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது. ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை, வளரத்தான் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆரம்பித்துவைத்தது வரலாற்றின் வேடிக்கை. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான்.
