முள்வலி…
டாக்டர் தொல். திருமாவளவன் எழுதிய முள்வலி... இலங்கையில் தமிழர்களின் துயரங்களை விவரிக்கும் பயணக் கட்டுரை. விடுதலைப் புலிகள், அகதிகள் முகாம் வாழ்க்கை குறித்த உண்மையான அனுபவங்கள்.
| Category | Article |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
சுதந்திர தமிழ் ஈழம் வேண்டி, இறுதிகட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களையும், நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளையும் கொன்று குவித்த சிங்களப்படை, சுமார் மூன்றரை லட்சம் தமிழர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அடைத்து வைத்திருப்பதை பல்வேறு புகைப்பட, வீடியோ ஆதாரமாகக் கண்டு ரத்தக்கண்ணீர் வடித்தனர் உலகத் தமிழர்கள். முகாம்களில் அடைந்து கிடந்த தமிழர்களை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், முதல் வெற்றிகரமான முயற்சியாக இலங்கைக்குச் சென்ற தமிழக எம்.பி_க்கள் குழுவின் பயணத்தைத்தான் சொல்ல வேண்டும். இந்தக் குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இடம்பெற்றதே பல்வேறு சூடான விமரிசனங்களைக் கிளப்பியது. ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவரை இந்திய மற்றும் இலங்கை அரசு எப்படி அனுமதித்தது... அவரால் பிரச்னைகள் ஏற்பட்டுவிடாதா?’ என சலசலப்புகள் எழுந்தன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்துவிட்டது அவர் ஜூனியர் விகடன் இதழ்களில் எழுதிய 'முள்வலி...' பயணக் கட்டுரை!
