நீரதிகாரம் (இரண்டு பாகங்கள்)
அ. வெண்ணிலா எழுதிய நீரதிகாரம் - சமூகப் பிரச்சனைகள், வறட்சி, மற்றும் பெரியாறு அணையின் முக்கியத்துவத்தை விவரிக்கும் ஒரு காவிய நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Hardcover |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789394265172 |
Description
"இந்நூல் அணைக்கட்டின் பெருமை பேசுவது, பென்னிகுக்கின் தியாகத்தின் சிறப்பை முன்வைப்பது என்பதில் ஐயமில்லை. ஆனால் அணைக்கட்டு என்பது அடிப்படையில் இயற்கையில் ஊடுருவுவது, காடழிவுக்குத் தொடக்கம் அமைப்பது என்பதையும் கூறத்தவறவில்லை. இந்த முழுமைச் சித்திரம் இந்நூலுக்கு பண்டைக்கால யதார்த்தவாதச் செவ்வியல் நாவல்களுக்குரிய ஒட்டுமொத்தப் பார்வையை அளித்து இதன் காவியத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
இத்தகைய நூலுக்குத் தேவையான மிகப்பெரிய களப்பணியை வெண்ணிலா செய்திருக்கிறார். நுணுக்கமான செய்திகள் அத்தியாயம்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. ஓர் வரலாற்று நூல் என்பதற்கும் மேலாக பெருங்காவியங்களைப் போல ஒரு பண்பாட்டு வெளிப்பாடாகவே கருத்தில் கொள்ளவேண்டிய பெரு நூல் அ.வெண்ணிலாவின் நீரதிகாரம்."
-ஜெயமோகன்
"மதுரையின் தாதுவருடப் பஞ்சத்தில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மடிந்த துயரை விவரிக்கும் காட்சிகளில் தொடங்கி, அந்த வறட்சிக்குத் தீர்வாக பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டு வைகையில் நீர் வருவதில் இந்தக் கதை முடிகிறது. ஒரு சமூகத்தின் அடிப்படையான பிரச்னைகளைக் குறித்த விவாதங் களையும் அதற்கான தீர்வுகளையும் தேடிய நாவல்களின் வரிசையை எடுத்துக்கொண்டால் அதில் மிக முக்கியமான இடம் அ.வெண்ணிலாவின் நீரதிகாரத்துக்கு உண்டு.
ஒரு படைப்பாளர் உருவாக்கும் கதையுலகையும், கதாபாத்திரங்களையும் அவர் என்ன மனநிலையில், என்ன நோக்கத்துக்காக உருவாக்குகிறாரோ அதே நோக்கத்தோடு வாசிக்கிறவரும் புரிந்துகொள்ள முடிவது புனைவில் அசாத்தியமான தருணம். நீரதிகாரத்தில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது."
-லஷ்மி சரவணகுமார்
