Skip to content

சூப்பர் சக்சஸ்

சாமானியரை செல்வந்தராக்கும் வழிகள்

வேங்கடம் எழுதிய சூப்பர் சக்சஸ் - செல்வம் சேர்க்கும் வழிகள், தொழில் வாய்ப்புகள் மற்றும் வெற்றி ரகசியங்களை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher விகடன் பிரசுரம்
Language தமிழ்
Format Paperback
Tags Society and Economy

Description

‘உழைத்தால் முன்னேறலாம்’ என்பது பொது விதி. ஆனால், உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கிய அத்தனைபேரும் பெரிய செல்வந்தர்களாக உயர முடிந்ததில்லை! அதேபோல, செல்வந்தர்களாக உயர்ந்தவர்கள் அத்தனைபேரும் கடும் உழைப்பை மேற்கொண்டவர்கள் என்று சொல்லவும் முடியாது! அப்படியானால், ஒரு சாமானியன் எப்படித்தான் செல்வந்தன் ஆவது? ‘உழைப்பு மட்டும் போதாது. உங்கள் சிந்தனை புதிதாக இருக்க வேண்டும். உங்கள் திறமைக்கு உரிய மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். செய்யும் தொழிலை ரசித்துச் செய்ய வேண்டும். முதலீடு இல்லாமல் மற்றவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு அதிகாரிகளையும், கடைநிலை ஊழியர்களையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தோல்வி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் தொழிலை எந்த ஊரில் தொடங்க வேண்டும் என்பதை ஆராய வேண்டும்...’ இப்படி, சாமானியர்களும் செல்வந்தர்களாக உயரமுடியும் என்பதற்கு வெற்றி பெறும் வழிகளை இந்நூலில் சொல்கிறார் வேங்கடம்.